வல்வை விளையாட்டரங்கின் 9 ஆவது வருட நிறைவு, மினி புட் கோல்ப் அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2021 (சனிக்கிழமை)
வல்வை விளையாட்டு அரங்க (Indoor Futsal ground) 9 ஆவது வருட நிறைவு தினம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
மாலை 5 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கப்டன் ஆதவன் கலந்து கொண்டார். பேராசிரியர் சபா ராஜேந்திரனின் ஆரம்ப உரையினைத் தொடர்ந்து, விளையாட்டரங்கின் கடந்த கால நிகழ்வுகளை விளக்கும் புகைப் படத் தொகுப்பின் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
எட்வேட் தங்கவடிவேல் மற்றும் அரு சபாரெத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரின் முயற்சியால் வல்வை விளையாட்டு அரங்கம் - (Indoor Futsal ground) 15.04.2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
மினி புட் கோல்ப் அறிமுகம்
8 ஆவது வருட நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், திரு சபா ராஜேந்திரன் அவர்களால் மினி புட் கோல்ப் என்னும் புதிய விளையாட்டு ஒன்று அறிமுகப் படுத்தப்பட்டது.
தொடர்ந்து அண்மையில் இதே மைதானத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கால் பந்தாட்ட காட்சிப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.