வல்வை கடலோரப் பகுதியில் பல மில்லியன் செலவில் அபிவிருத்திப் பணிகளுக்கு மீன்பிடி அமைச்சு முயற்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2018 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை கடலோரப் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு (Ministry of Fisheries and Aquatic Resources Development) முன்வந்துள்ளது.
மீன்பிடி படகுகள் மற்றும் வள்ளங்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கக் கூடிய நங்கூரத் தளம் ஒன்று (Fishing boats Anchorage) வல்வெட்டித்துறை ஆதிகோவில் பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
இது சம்பந்தமாக சில மேலதிக தகவல்களை கொடுக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மீன் பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் காரியாலத்தில் இடம்பெற்றது.
இச்சசந்திப்பில் வல்வை நகரசபையின் திட்டமிடல் குழுவின் தலைவர் திரு.செல்வேந்திரா மற்றும் கப்டன் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது, வல்வை பிரதேசத்தில் ஆதிகோவிலில் அமைவது போன்று இன்னொமொரு நங்கூரத்தளம் அமைப்பதன் சாத்தியம் பற்றிக் கேட்ட பொழுதே, அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பொலிகண்டிக்கும் ஆதிகோவிலுக்கும் இடையில் மிகவும் குறுகிய தூரத்தில் இன்னொமொரு நங்கூரத் தளம் அமைப்பதன் சாத்தியம் குறைவு என்றும், தகுந்த திட்டங்கள் (Proposals) மிகக் குறுகிய காலத்தில் தர முடிந்தால் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் வல்வெட்டித்துறை கடலோரப் பகுதியில் குறித்த அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றித்தர முடியும் எனக் கூறியுள்ளார்.
அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி இந்த வருட இறுதிக்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.