தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2020 (திங்கட்கிழமை)
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வட மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள், முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (18) காலை முல்லைத்தீவு செல்ல முயன்ற போது கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி யாழ் செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாக கூறி நிகழ்வினை தடை செய்தனர்.
அதன்போது நீதிமன்ற உத்தரவை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து சி.வி.விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.
அவர் புறப்பட்டு ஒரு சில நிமிடத்தில் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், க.அருந்தவபாலன் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரின் தடையையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். (Newariyalai.com)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.