யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் நேற்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டன.
அந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டி துறை வடக்கு ஜே. 251 கிராமசேவகர் பிரிவில் 54 ஏக்கர் மக்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, யாழ்.மாவட்டச் செயலரிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு பின்னர் 27 ஆண்டுகள் கடந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இராணுவத்தினர் மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தையும் அதனை சூழவுள்ள 54 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளையும் விடுவித்து யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகமானது இலங்கையில் மொத்த மீன்பிடியில் மூன்றில் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(வீரகேசரி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.