கடல் சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/09/2018 (வியாழக்கிழமை)
சர்வதேச கடற்கரை சுத்திகரிப்பு தினத்தையொட்டி (International Beach Clean-up Day), தேசிய கரையோர மற்றும் கடல் சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் (National Coastal and Marine Resources Conservation Week) தற்பொழுது நாடு பூராவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினாலும் பருத்தித்துறை பிரதேச செயலகத்தால் வல்வையின் கடற்கரைப் பகுதிகளின் சில பகுதிகள் உட்பட்ட சில கரையோரப் பகுதிகள் இன்று சுத்தமாக்கப்பட்டன .
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரச அதிபர், பருத்தித்துறை பிரதேச செயலர், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அலுவலர்கள், நகராட்சி மன்ற அலுவலர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய கரையோர மற்றும் கடல் சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் வல்வை சைனிங்ஸ் கடற்கரையில் இன்று காலை இடம்பெற்றது.
இதேவேளை நேற்றைய தினம் கரவெட்டிப் பிரதே சபையால் வல்லை பகுதியில் அமைந்துள்ள ஏரியின் சில பகுதிகள் சுத்தமாக்கப்பட்டன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.