25 கோடி பெறுமதியான ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகம் வல்வையில் அமையவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/02/2016 (சனிக்கிழமை)
விளையாட்டுத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நீச்சல் தடாகம் ஆழிக்குமரன் ஆனந்தன் பெயரில் சில நலன் விரும்பிகளின் வேண்டு கோளுக்கு இணங்க ஆனந்தனின் பெயரில் நிறைவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த தடாகத்தை ஆனந்தன் பிறந்து வளர்ந்து சாதனைகளை ஆரம்பித்த வல்வெட்டித்துறையிலே அமைக்கக் கோரி வட மாகாண சபை உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அரச அதிபர் திரு.வேத நாயகத்திற்கு முன்னர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இந்த அறிக்கையை கொழும்பின் மத்திய அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்றுக்கொண்டு 25 கோடி ரூபாக்களை ஒதுக்கியுள்ளது. தேசிய தரத்தினாலான நீச்சல் போட்டிகளை நடத்துவதற்குரிய தரத்தில் நீச்சல் தடாகத்தை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வடமாகான விளையாட்டுத்துறைப் பணிப்பாளர், மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தவர்களுக்கு வல்வை தீருவில் பொது பூங்கா அமைந்த காணி காண்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை திருப்தியாக ஏற்றுக்கொண்டு காணிகளை கையளிக்கும் சம்மதத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அதன அடிப்படையில் சிவாஜிலிங்கம் அவர்களின் கோரிக்கையை ஏற்று வல்வெட்டித்துறை நகரசபை செயலர், உலக கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல் தடாகம் அமைப்பதற்கான காணியை பயன்படுத்துவதற்காண அனுமதியினை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களிடம் பெற்று, மத்திய அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு தெரிவிப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெகுவிரைவில் வரைபடம், மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உரிய அங்கீகாரம் பெறப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்த பின்னர் நீச்சல் தடாகம் பராமரிப்பு வேலைகளை வல்வெட்டித்துறை நகரசபையிடம் கையளிக்கப்படும் என வடமாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம எமக்குத் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
rajkumar periyathamby (canada)
Posted Date: February 07, 2016 at 00:54
மிகவும் மகிழ்வான செய்தி ! எமது அடுத்த தலைமுறை குழந்தைகளை சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் சிறந்த சிந்தனையாளர்களாகவும் சிறந்த வழிகாட்டிகளாகவும் உருவாக்கவேண்டியது நாம் ஒவ்வருவருடைய கடமை .
Amirthaganesan (Canada)
Posted Date: February 06, 2016 at 18:48
Very good news
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.