யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வாசிப்பு மாதப் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வடமராட்சி கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் நூலக இணைப்பாளருமாகிய திரு து, ராமதாஸ் அவர்களும், வசாவிளான் மத்திய கல்லூரி நூலக ஆசிரியருமாகிய திரு நி. பவானந்தசர்மா அவர்களும் விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
மேற்படி நிகழ்ச்சியில் வாசிப்பு மாதத்தையொட்டி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்குரிய பரிசளிப்பும் மாணவர்களின் பரிசில் பெற்ற ஆக்கங்களும் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.