வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் நிதி அமைச்சின் உதவியுடன் நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு, அது ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ என பெயர் சூட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்குறித்த நீச்சல் தடாகத்தை குழந்தைகள் தடாகம், குத்துக் கரணம் அடிக்கும் பகுதி என மேலும் இரண்டு கட்டங்களுக்கு விரிவு படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றினைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக அதே பகுதியில் கடல் நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடல் நீச்சல் தடாகத்துக்கு பாக்கு நீரிணைய முதலில் நீந்திக் கடந்த நீச்சல் வீரன் நவரத்தினசாமியின் பெயரில் ‘நவரத்தினசாமி கடல் நீச்சல் தடாகம்’ சூட்டப்படவுள்ளது எனத் தெரிய வருகின்றது.
மேற்குறித்த கடல் நீச்சல் தடாகத்தை அமைக்கும் பொருட்டு, வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரால் கடந்த 14.04.2014 ஆம் திகதி அன்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மனித வலு மற்றும் கனரக இயந்திரம் கொண்டு பணிகள் இடம்பெற்ற வேளையில், இது தொடர்பாக குழப்பவாதிகள் ஓரிருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பெயரில் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தால் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
முன்னர் இராணுவ முகாம் அமையப் பெற்றிருந்த குறித்த இப்பகுதியை, தமது கடும் முயற்சிகள் கொண்டு திருத்தியமைத்த ரேவடி விளையாட்டுக் கழகத்தினர், கடற்கரையைப் பாதுகாக்கும் நோக்குடன் அணை ஒன்றை கட்டி, சிறுவர் பூங்கா ஒன்றையும் அமைதிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
14.04.2014 ஆம் ஆண்டு ஆரம்ப பணிகளில் ரேவடிக் கழகத்தினர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.