இந்துக்களின் நீண்ட முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமானது.
இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார்.
இந்த ஐதீகத்தின்படி, புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.
இந்த ஆண்டு சாரதா நவராத்திரி 8 நாட்கள் மட்டுமே அனுஷ்டிக்கப்படும். அதற்கு காரணம் இந்த ஆண்டு சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதி ஒரே நாளில் வருகிறது. 9 ஆவது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெற உள்ளது.
அதற்கமைய நவராத்திரி விரதம் ஆனது இன்று 7 ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை 9 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்துவார்கள். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக, 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். தினமும் காலையும், மாலையும் இந்த கொலுவின் முன்பு கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள், படையலிட்டு வழிபாடு நடைபெறும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், இடையில் உள்ள 3 நாட்கள் லட்சுமி தேவிக்கும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் வழிபாடு செய்யப்படும்.
நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
நவராத்திரியைத் தொடர்ந்து விஜயதசமி இடம்பெறவுள்ளது.
கீழே படங்களில் வல்வை நேதாஜி சனசமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி பூஜை வழிபாடுகளின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.