NEPL உதைபந்து - Play offs சுற்றுக்குள் வல்வை எப்சி அணி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/08/2018 (வெள்ளிக்கிழமை)
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரின் 11 ஆவது சுற்றின் 2 வது போட்டி நேற்றைய தினம் இரவு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இவ் ஆட்டத்தில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளில் ஒன்றான வல்வை எப்.சி அணியை எதிர்த்து, திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ரிங்கோ டைட்டன்ஸ் அணி மோதியது.
இப்போட்டியில் வல்வை அணி 5:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
வல்வை எப்.சி சார்பாக அணித் தலைவர் ஞானம் 2 கோல்களையும், துசி, அகீபன் மற்றும் கலிஸ்ரன் தலா 1 கோல்களையும் பெற்றனர்.
இவ் வெற்றியின் மூலம் வல்வை எப்.சி அணி 2 வது அணியாக பிளே ஒப்ஸ் (Play offs) சுற்றுக்குள் நுழைந்துள்ளது.ஏற்கனவே ரில்கோ அணி பிளேஒப் வாய்ப்பினை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.