காங்கேசன்துறை துறைமுகத்தைச்சார்ந்த புதிய பொருளாதார வலயம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார. காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக துறைமுகமாக அபிவிருத்தி செய்து, அதனை சார்ந்ததாக புதிய பொருளாதார வலயத்தை அமைக்கப் போவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் கடந்த 14 ஆம் திகதி காங்கேசன்துறை பகுதிக்குச் சென்று நிலைமைகளை கண்டறிந்தனர். துறைமுகங்கள்இ கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் பிரதமருடன் சென்றிருந்தார்.
துறைமுக அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதோடு குறிப்பாக காணிகளை சுவீகரிப்பதற்கான பூர்வாங்க பணிகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறு பிரதமர் இதன் போது மேலதிகாரிகளை பணித்தார். இதற்கு இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் நான்கரை கோடி அமெரிக்க டொலருக்கு மேலான தொகை கிடைக்கவுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
சரக்கு கப்பல்களுக்கு வசதியளிக்கும் விதத்தில் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இறக்குமதியும், ஏற்றுமதியும் வலுவடைந்து கூடுதலான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும் எனவும்; குறிப்பி;ட்டார். மேலும் தெரிவிக்கையில் சரக்குக் கப்பல்களை நங்கூரமிடச் செய்யும் வகையில் துறைமுகத்தின் ஆழத்தை எட்டு மீற்றர்களாக அதிகரித்து மற்றுமொரு இறங்குதுறை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.