ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மேலும், தனது தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுரைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைக்கபெற்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் பேச வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த பழமையான புகைப்படத்தையும் சேர்த்து பாரதியாரின் அசல் புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.