நகரசபைத் தேர்தல் - சுவரொட்டியொட்டுவோர் கைது செய்யப்படுவர்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2018 (வியாழக்கிழமை)
தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
சுவரொட்டிகள் ஒட்டுவோரை பின்தொடர்ந்து சென்று கைது செய்வது இலகுவான காரியம் அல்ல. கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் கைதுகள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் தற்போது வழங்கப்படும் பொ லிஸ் பிணை இரத்து செய்யப்படுமெனவும் அவர்கள் விளக்கமறியலில் அடைக்கப்படுவார்கள் எனவும் நான் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
சுவரொட்டிகளை ஒட்டுவது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டிய கடமை பொதுமக்களுக்கு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகளை ஒட்டுவோர் தொடர்பில் உரிய ஆதரத்துடன் பொலிசாருக்கோ எமக்கோ அனுப்பி வைத்தால் நாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் அலுவலகங்களை அகற்றுவது தொடர்பிலும் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
எதிர்வரும் 31ஆம் திகதி அரசியல் அலுவலகங்களை அகற்ற வேண்டாமெனவும் ஏழாம் திகதி வரை அதனை அனுமதிக்குமாறும் அரசியல் கட்சிகள் எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என மேலும் குறிப்பிட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.