நாட்டின் வடபகுதியில் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North East Monsoon) தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக யாழ் வடமராட்சிப் பகுதியின் வல்வெட்டித்துறை உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களில் மழை பெய்து வருகின்றது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் ஐப்பசி மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆரம்பமாகும் வடகீழ் பருவ பெயற்சி காலநிலை (North east monsoon) ஆனது, தை மாத நடுப்பகுதி வரை நீடிப்பது வழமையாகும்.
சுமார் 1200 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியை வருடந்தோறும் பெறும் யாழ் தீபகற்பத்தின் பிரதான நீர்வீழ்ச்சியானது, தற்பொழுது ஆரம்பித்துள்ள வடகீழ் பருவ பெயற்சி காலநிலை மூலமே கிடைக்கப்பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் யாழ் தீபகற்பத்தின் நீர்த் தேவையின் பிரதான வளமாகவும் இது அமையப்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.