வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் - 2019 இல் வல்வை எப்.சி அணி முதல் போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை 3:1 என வீழ்த்தி இன்றைய இரண்டாவது போட்டியில் ரிங்கோ டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இவ் ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய வல்வை எப்.சி அணி 04:01 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் வல்வை எப்.சி அணி மேலும் நான்கு கோல்களையும் ரிங்கோ டைட்டன்ஸ் அணி மேலும் ஒரு கோலையும் பெற்று கொள்ள ஆட்ட நேர முடிவில் 08:02 என்ற கோல் கணக்கில் வல்வை எப்.சி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
வல்வை அணிக்காக 4 கோல்களை போட்ட அபீஸ் அவர்கள் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.