வடக்கு வட்டமேசை கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நாளை வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ் மாவட்ட பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவம் மிக்கவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த வட்ட மேசை கலந்துரையாடல் 'வடமாகாணத்தில் துடுப்பாட்ட அபிவிருத்தியும், தற்போதைய பின்னடைவிற்கான காரணங்களும்' என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.