மரம் நடுகை மாதத்தையொட்டி வடமாகாணசபை உறுப்பினர்கள் வல்வையில் இன்று மரங்களை நாட்டினர் (படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/11/2014 (புதன்கிழமை)
இந்த மாதம் வடமாகாணசபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மரம் நடுகை மாதத்தையொட்டி, இன்று வடமாகாணசபை உறுப்பினர்கள் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாட்டியதுடன் பொது மக்களிற்கும் மரநடுகைக்காக மரக்கன்றுகள் விநியோகம் செய்திருந்தனர்.
பிற்பகல் சுமார் 3 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதி நகரசபை தவிசாளர் திரு.க.சதீஸ் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாணசபை விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்கள் திருமதி அனந்தி எழிலன், திரு.கஜதீபன், திரு.சுகிர்தன் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் திரு.சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மரங்கள் வல்வெட்டித்துறை நெற்கொழு பொது விளையாட்டரங்கிலும் மற்றும் வல்வெட்டித்துறை சந்தியிலும் நாட்டப்பட்டதுடன், வல்வை சந்தியில் வைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.