வல்வையின் பிரபல முன்னாள் தமிழ் ஆசிரியர் கே.தங்கவடிவேல் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2014 (புதன்கிழமை)
வல்வையின் பிரபல முன்னாள் தமிழ் ஆசிரியை கே.தங்கவடிவேல் (29.07.14) செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார். இவருக்கு வயது 82.
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு.கே.தங்கவடிவேல் அவர்கள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.
திரு.கே.தங்கவடிவேல் அவர்கள் மிக நீண்டகாலமாக வல்வையில் முன்னர் அமைந்திருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனமான வல்வைக் கல்வி மன்ற தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். மிகச் நேர்த்தியாக தமிழ் எழுத்துக்களை எழுதவல்ல இவர் ஓவியங்கள் வரைவதிலும் சிறந்தவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Srinivasan (UK)
Posted Date: August 02, 2014 at 01:34
Great Teacher, It is a loss for all of us mainly those who live in VVT, Sitting in class and listening to his lecture with great artwork on black board ; is one of the greatest time in our life, He is a great artist too. Our heartfelt condolences to his family.
Vasan & Jeyanthy
சுவாமி ராஜேந்திரா (UK)
Posted Date: July 31, 2014 at 20:14
தமிழ் ஆசான் தங்கவடிவேல் மறைவு கேட்டு மனவருத்தம் அடைந்தோம். அன்னார் ஒரு பாரபட்சம் பாராது , பிரதேச வாதம் என்னும் மதம் பிடித்தலையாது, தன்னலம் பாராது தமிழுக்கு எமது வல்வைக் கல்வி மன்றத்தூடாக தொண்டு செய்த தலை சிறந்த மாமனிதர்.
அவர் குடும்பத்தினருக்கு எமது துயரை தெரிவிக்கின்றோம்
மனவருத்தத்துடன்
மாஸ்டர்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.