மரண அறிவித்தல் - ஆறுமுகம் அதிரூபசிங்கம் (இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/07/2017 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
ஆறுமுகம் அதிரூபசிங்கம்
(இளைப்பாறிய பிரதி மேலதிகாரி - பருத்தித்துறை போக்குவரத்துசபை)
மலர்வு :24-08-1938 உதிர்வு : 06-07-2017
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 06-07-2017 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கவேலாயுதத்தின் சகோதரனும்,
பத்மலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,
இளமதி, காலஞ்சென்ற இளவேணி, கப்டன் ஆதவன், கப்டன் ஆசுகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலசேகரன், அமுதா, நிர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், ஆகமன், அமிழ்தினி, வாசவி, அச்சுதை, அற்புதை, அநிந்திதை ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மற்றும் ராஜசுலோசனா, காலஞ்சென்ற பாலேந்திரராணி, ரதி, பாலேஸ்வரி, காலஞ்சென்ற பாலமோகன், ராஜமோகன், ஜெயஸ்ரீ, மோகனமனோகரி, மேகவர்ணராஜா, மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜயாபிள்ளை, சுந்தரேசன், ரணராஜா, தணிப்பெருங்கருணை, செல்வராணி, சிவகணேசன், ஜெயப்பிரகாஷ், தயாவதி, ராகவன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12-07-2017 புதன்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.