வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் மயிலேறும் பெருமாள் இன்று 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் ஞானாம்பிகை தம்பதியின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரதியின் அன்புக் கணவரும்,
அருண், மயூரன், சிவபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதுரா, கோபிகா ஆகியோரின் மாமனும்,
ஜந்தவி, மைத்திரேயன், ஆதிரேயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, செல்வநாயகி, நடேசன், சிவகாமசுந்தரி, சகுந்தலாதேவி மற்றும் முருகமூர்த்தி தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் மற்றும் ஞானாம்பிகை காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், அழகானந்தசுந்தரம் மற்றும் பவானி, காலஞ்சென்றவர்களான வரதராஜன் மற்றும் ராஜேஸ்வரி, ராஜ்குமார், தெய்வேந்திரன், தமயந்தி, இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 08.10.18 பிற்பகல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.