வல்வெட்டித்துறை கப்பலுடையவர் வீதி, மதவடியை பிறப்பிடமாகவும், உஷா பவனம், ஊரிக்காடு எனும் முகவரியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் 30-04-2018 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் கதிர்காமத்தம்பி தேவசிகாமணி தம்பதியினரின் மகனும், செல்வநாயகம் (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்) அம்பிகா ஆகியோரின் மருமகனும், உசாரானியின் பாசமிகு கணவனும்,
கவிச்செல்வன் (பிராந்திய முகாமையாளர் Hutch Telecom), கதிர்ச் செல்வன் (முகாமையாளர், Amana Insurance), பிரகாஸ் (பொறியிலாளர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை), சக்திதாஸ் (இறுதியாண்டு மாணவர் Univercity of College) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
மேனகா (ஆசிரியர் குடத்தனை அ.த.க பாடசாலை மற்றும் வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை) விஜயசாந்தினி ஆகியோரின் மாமனாரும்,
லக்சிவிகனின் பேரனும்,
அமரர் மனோகதாஸ், சுரேந்திரதாஸ், அமரர் கலாநிதி தேவி நடனசிகாமணி, அமரர் குணாநிதி தேவி, சுலோசனா தேவி, நவரத்தினம், பவானிதேவி ஞானவேல், ரஜனிதேவி தர்மகுலசிங்கம், ஆகியோரின் சகோதரரும்,
சுந்தர் ராஜன் (நியூசிலாந்து) பிருதிராஜன் (லண்டன்), யோதிராணி (லண்டன்) யுவராஜன் (நியூசிலாந்து), யோகராஜன், சர்குனராஜன் (கொழும்பு) ஆனந்தராஜன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 30.04.18 மாலை அன்னாரின் மயிலியதனை வீட்டில் இடம்பெற்று தகனக் கிரியைகள் ஊரணி இந்து மயானத்தில் இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Thangeswaran Thiresaratnam (Sri Lanka)
Posted Date: May 01, 2018 at 09:11
Heartfelt condolances
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.