மலேசியாவைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை திருகோணமலை இரத்மலானை வசித்தவருமாகிய திருமதி மகேஸ்வரி பாலவடிவேல் அவர்கள் 04 - 05 -2018 திகதியன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மேல் நீதிமன்ற நீதிபதி பாலவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திரு திருமதி மயில்வாகனசுந்தரம் சரஸ்வதியின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு திருமதி பொன்னுசாமி புண்ணியவதியின் அன்பு மருமகளும்,
ரஞ்சனி (செயலாளர், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு), ஜெயக்குமார் (உயிரியல் மருத்துவ தொழில் நுட்பவியலார், சுகாதார சேவைகள் திணைக்களம், திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
S.N.R பிள்ளை, சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி கந்தசாமி(மலேசியா), ஜெயலஷ்மி தணிகாசலம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொ.கந்தசாமி, பொ. கனகராஜா, புஷ்பவதி திருநாவுக்கரசு, எஸ்.கந்தசாமி, மு.தணிகாசலம் மற்றும் அன்னரெத்தினம் கணேசலிங்கம் (UK) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயசாயி கௌதமன், ருக்ஷாங்கன், சாயிகாத்யாயணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு கல்கிசை மிகிந்த மலர்சாலையிலிருந்து எடுத்து செல்லப்பட்டு கல்கிசை போது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.