மரண அறிவித்தல் - இரத்தினசாமி சண்முகதாஸ் (இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்)
பிரசுரிக்கபட்ட திகதி: 03/06/2016 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
இரத்தினசாமி சண்முகதாஸ்
பிறப்பு : 13 - 09 - 1954 இறப்பு : 02 - 06 - 2016
வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி சண்முகதாஸ் இன்று (02.06.2016) காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான இரத்தினசாமி சோபனவல்லி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம் சென்ற யோகராணியின் அன்புக் கணவரும்,
காலம் சென்றவர்களான வேலும் மயிலும், ராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலம் சென்றவர்களான ராசலட்சுமி, சிவஞானவேல் மற்றும் சற்குணதாஸின் அன்பு சகோதரரும்,
இளங்கோ, பிரபாகரன், தமிழ்மாறன், கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலம் சென்ற தர்மலிங்கம் மற்றும் சாரதாதேவியின் அன்பு மைத்துனரும்,
பகீரதி, பிரதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனும், சகானாவின் அன்புப் பேரனும், சம்யுக்தாவின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை (03.06.2016 வெள்ளிக்கிழமை) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
இ.யோகன் (Srilanka)
Posted Date: June 06, 2016 at 19:59
தைரியம் மிகுந்த எனது நண்பன் சண்முகதாஸ் ஏன் திடீரென மரணித்து விட்டான் என்பதை எண்ணுகின்றபோது திகைப்பும் வருத்தமும் மிகையாக உள்ளது. பல விடயங்களில் முன் எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் கொடுக்கின்ற ஒரு துணிச்சல் மிக்க நண்பன். மறைந்தும் மறையாத உனக்கு மனதால் மலர் அஞ்சலி செலுத்துகிறேன் நண்பா...
இ.யோகன்.
Ravi (UK)
Posted Date: June 03, 2016 at 07:57
கண்ணீர் அஞ்சலி
ஓ நண்பா
பள்ளிப் பராயதிலிருந்தே பக்கத்திலிருந்தாய் நண்பா!
விடலைப் பருவத்திலும் விடாது தோள் கொடுத்தாய் நண்பா!
மனையாளைக் கரம் பிடிக்க சாட்சிக் கையெழுத்திட்டு தோழனாய் நின்றாய் நண்பா!
லண்டனுக்கும் நிழல் போல் தொடர்ந்து வந்தாய் நண்பா!
எச் சந்தர்பத்திலும் நமது நட்பு நலுங்காமல் பார்த்தாய் நண்பா!
உன் ரதியை விதி பிரித்தபோது பெரு நெஞ்சுகொண்டு தாங்கி நின்றாய் நண்பா!
பெற்ற பிள்ளைகளுக்ககாத் தொடர்ந்து போராடி வந்தாய் நண்பா!
என் தேவைகளை மனம் சலிக்காமல் செய்து தந்தாய் நண்பா!
இனிக் கேட்பதற்கு யாருமில்லையென ஏங்கித் தவிக்கிறேன் நண்பா!
சித்திரை வெய்யிலில் சிந்திய வியர்வையோடு வந்த உன்னை சந்தித்தேன் நண்பா!
கழக வேலை என்றாய், கணபதியின் காணி வேலை என்றாய் நண்பா!
கால்மணி நேரம் காலாற நின்றதில்லை நீ நண்பா!
அதிகாலையிலேயே வந்து ஆரத்தழுவி வழியனுப்பினாய் இறுதிச் சந்திப்பென்று தெரிந்தா நண்பா!
உன் செல்வங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை மன்னித்துவிடு நண்பா!
மீளாத் துயிலில் நீ ஆண்டவனுடன் நண்பா!
ஆறாத் துயரில் நாம் கண்ணீருடன் நண்பா! ஓ நண்பா!!
என்றும் நட்பை மறவா நண்பன்
ரவி,
லண்டன்
S.sivanesan (Srilanka)
Posted Date: June 03, 2016 at 04:12
Shanmugathas has worked with me as 3rd engineer in Greekships. He was very hardworking and pesevering.have was very friendly and respectful person.At ports , he entertained his fellow crew members by cooking tasty foods and share with them.he was actively participated in all events in vvt. His sudden demise is a great loss to the people of valvettiturai.
I pray god to grant him peace and rest in heaven.
k.S.Thurai (Denmark)
Posted Date: June 02, 2016 at 22:02
என் அன்பு நண்பன் அமரர் சண்முகதாஸ்.. அவர்களுக்கு மரியாதைகள்..
ஒன்றாகப் படித்தோம்.. ஒன்றாக விளையாடினோம்.. கடைசியாக இங்கிலாந்து வீதியில் ஒரு நாள் சந்தித்துப் பேசினேன்..
நல்ல மனம் உள்ளவர்.. பிள்ளை குணம் உள்ளவர்.. யாரும் பழகும் மென்மைக் குணம் கொண்டவர்.. சகலன் தருமி மாமாவுடன் கூடப்புறப்பட்டுவிட்டார்..
பசுமை நிறைந்த நினைவுகளே..
பாடித்திரிந்த பறவைகளே..
நண்பா காட்டுவளவு கடற்கரையில்
பழைய வள்ளத்தில் கப்பலோடி விளையாடினோமே..
உன்னை மறக்கத்தான் முடியுமா..
ஓடிப்போக உனக்கு வயதில்லையே நண்பா..
பிள்ளையார் சாமி உன்னை வரவேற்றுவிட்டார்..
சென்று வா.. நண்பா
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.