மரண அறிவித்தல் - வைத்திய கலாநிதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2019 (புதன்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம்
(வைத்திய கலாநிதி தெல்லிப்பளை அரசினர் ஆதார வைத்தியசாலை)
பிறப்பு : 29-12-1977 இறப்பு :23-07-2019
தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும், யாழ் கே.கே.எஸ் வீதி சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தெய்வாம்பிகை சண்முகரத்தினம் 23.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் தொண்டைமானாற்றைச் சேர்ந்த சாந்தரத்தினம் தெய்வேந்திரம் (ஓய்வூதியர்), காலஞ் சென்ற விமலாசனி (ஓய்வுபெற்ற இடைக்கால மகா வித்தியாலய அதிபர்) தம்பதியினரின் புதல்வியும்,
சண்முகரத்தினத்தின் (IT விரிவுரையாளர் – கொக்குவில் தொழிநூட்பக் கல்லூரி) அன்பு மனைவியும்,
பருத்தித்துறையைச் சேர்ந்த இரத்தினம் – இந்திரலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் மருமகளும்,
குருபரன், லாவண்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பங்கையற்செல்வியின் (லண்டன்) மைத்துனியும்,
பைரவி, பிரணவி ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (25-07-2019) வியாழக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 04.00 மணியளவில் ஆறுகால் மடத்து கோம்பயன் மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.