தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னாயத்தக் கூட்டம் கடந்த மாதம் பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பொதுமக்கள் / பக்த அடியார்கள் கவனத்திற்கு அறியத் தரப்பட்டன.
1 . மகோற்சவ காலத்தில் ஆலயச் சூழலில் ஒரு பாதை நடைமுறைப்படுத்தப்படும் இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதனை தடுக்க முடியும். அதன்படி ஆலய பிரதான வீதியின் ஊடாக உள்நுழைந்து ஆற்றங்கரை வீதி வழியாக வெளிச்செல்லமுடியும். ஆற்றங்கரைக்கு பக்கத்தில் இருக்கின்ற பாதையின் ஊடாக ஆட்டோக்கள் மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகனத் தரிப்பிடத்திற்கு செல்லமுடியும்.
2 . ஆலய வீதியில் பக்த தொடர்பான விடயங்களுக்குக்கே அனுமதிக்கப்படும்.
3 . கடைகள் மற்றும் வீதியோரக்கடைகள் ஆலய வீதியில் அமைக்கப்படுவதற்கு தடை செய்யப்படும்.
4 . தனியார் காணிகள் கடை அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற போது மகோற்சவம் நிறைவடைந்து மூன்று நாட்களுக்குள் அக் காணிகள் துப்பரவு செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யத்தவறின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
5 . ஆலய மகோற்சவ காலத்தில் உணவு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டியிருப்பின் அவை உரிமையாளர் நாட்டின் எப்பாகத்திலாவது உணவு நிலையம் நடத்துவதற்கான அனுமதியினைப் பெற்றிருக்கவேண்டும்.
6 . உணவு நிலையங்களில் உணவினைக் கையாள்பவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் மருத்துவசான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
7 . உணவு நிலையங்களுக்கான குடிநீர் பொதி சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெறப்பட வேண்டும்.
8. கடை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் முறையாக கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
9. குளிர்களி விநியோகம் மேற்கொள்பவர்கள் இரவில் குளிரூட்டியினை நிறுத்தி வைத்துவிட்டு காலையில் இயக்குவது பரிசோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டால் அவை தடை செய்யப்படும்.
10. தண்ணீர் பந்தல்களில் ஜஸ் கட்டி தொழிச்சாலைகள் இருந்து பெறப்படும் ஜஸ் கட்டிகள் பயன்படுத்தக் கூடாது.
உள்ளிட்ட பல விடயங்கள் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.