‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு (2 ஆம் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/08/2019 (வெள்ளிக்கிழமை)
கின்னஸ் சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்தில் அமைக்கப்பெற்றுள்ள ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ இன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் திரு.மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னான்டோ, திருமதி மணல் ஆனந்தன், ஆனந்தனின் மகன் ரஜன் ஆனந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.மாவை சேனாதிராஜா, திரு சுமந்திரன், திரு.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராஜா அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் காட்சிகளை கீழே படங்களில் காணலாம்.
மங்கள சமரவீர, மனல் ஆனந்தன், ரஜன் ஆனந்தன்
விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்
நீர் ஊற்றி தடாகத்தை திறந்து வைக்கும் விருந்தினர்கள்
முதல் நீச்சல் வீரர்களாக வல்வை வீரர்கள் மூவர்கள்
விருந்தினர்கள்
நெடியகாடு அமுதசுரபி நாட்டியக் குழுவினர் - வரவேற்பு நடனத்தில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.