கிராமத்துடன் உரையாடல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/10/2021 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கிராமத்துடன் உரையாடல் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் வல்வை நகர சபை உறுப்பினர்களுடன் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுத் தலைவர் திரு.அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு மக்களின் முன்மொழிவுகளைக் கேட்டறிந்து திட்டங்களை முன்னுரிமைப்படுத்தியிருந்தனர்.
அடுத்து வரும் நிதியாண்டில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் தலா மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் உத்தேசித்திருக்கும் நிலையில் குறித்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடம் கேட்டறிந்து அதிக தேவைப் பாடுடைய வேலைத் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தும் செயற் திட்டம் தற்பொழுது கிராம மட்ட ரீதியாக இடம்பெற்றுவருகிறது.
கீழே படத்தில் வல்வை ஆதிகோவில் பகுதியில் அங்கஜன், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையிலான அவ்வாறான சந்திப்பு இடம்பெறுவதனைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.