ஊரணி மயான எரியூட்டக் கொட்டகைகளில் ஒன்று புனரமைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2019 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை பகுதியில் ஊரணி பகுதியில் அமைந்துள்ள இந்து மயானத்தின் எரியூட்டுக் கொட்டைகைகளில் ஒன்று புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக வல்வெட்டி மற்றும் பொலிகண்டி மக்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் ஊறணி மயான மீள் கட்டுமானப் பணிகளே தற்போது நிறைவுக்கு வந்திருக்கின்றது.
வல்வெட்டி – பொலிகண்டியினைச் சார்ந்த மக்கள் தத்தம் உறவுகளின் அந்திம காலக் கிரியைகளை, இயற்கையின் இடையூரின்றி நடத்துவதற்கு ஏதுவாக மீள்-கட்டமைக்கப்பட்ட எரியூட்டுக் கொட்டகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டு மீளமைக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் (கனடா) வல்வெட்டி நலன்புரிச் சங்கம், ரொறன்ரோ, லண்டன் மற்றும் சுவிட்சலாந்து நாடுகளில் வாழும் வல்வெட்டி மக்களின் ஆதரவுடனும் வல்வெட்டித்துறை நகரசபையின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடனும் இந்த மீள் கட்டுமானத்திட்டம் நிறைவுபெற்றிருக்கிறது.
கீழே படங்களில் குறித்த எரியூட்டுக் கொட்டகையின் பழைய மற்றும் புதிய தோற்றத்தினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.