இருவரும் கிறிஸ்தவர்கள். இருவரும் கொரோணா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
போரிஸ் ஜோன்சன் தன்னை மருத்துவர்களே காப்பாற்றினார்கள் என்றும் தான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் போதகர் சற்குணம் தன்னை கடவுள் இயேசு காப்பாற்றியதாகவும் அதனால் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
உண்மைதான். மருத்துவர்கள் சிகிச்சை வழங்கும் அத்தனை பேரும் பிழைப்பதில்லையே. எந்தளவு மருத்துவம் வழங்கினாலும் சிலர் சாகிறார்கள்தானே.
எனவே தன்னை கடவுள்தான் காப்பாற்றினார் என்று கூறுவதற்கு போதகர் சற்குணத்திற்கு முழு உரிமையும் உண்டு.
ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவெனில் இந்த போதகர் சற்குணம் உண்மையில் கடவுள் இயேசுவை நம்பகிறாரா என்பதே.
ஏனெனில் கடவுள் தன்னை காப்பாற்றுவார் என்று உண்மையில் இவருக்கு நம்பிக்கை இருக்குமெனில் இவர் மருத்தவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்க வேண்டியதில்லை.
அதுவும் நோய்களுக்கு ஆவிகளே காரணம் என்றும் அதற்கு சிகிச்சை தேவையில்லை ஜெபம் போதும் என்று மற்றவர்களுக்கு போதித்து வந்த போதகரே தனக்கு நோய் வந்தவுடன் மருத்துவமனை ஓடிச்சென்று சிகிச்சை பெற்றிருப்பது ஆச்சரியமே.
இந்த போதகர் மட்டுமல்ல அனைத்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லோரும் நடைமுறையில் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவே செயற்படுகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் கடவுள் எழுதிய விதிதான் காரணம் என்று நம்புவர்கள்கூட றோட்டைக் கடக்கும்போது கடவுள் விதியை நம்பி கடப்பதில்லை. மாறாக றோட்டு விதிப்படி சிக்னல் லைற்றை நம்பியே கடக்கிறார்கள்.
தனக்கு நோய் வந்தவுடன் ஒடீச் சென்று மருத்தவமனையில் சிகிச்சை பெற்ற போதகர் சற்குணம் மீண்டும் என்ன நம்பிக்கையில் மக்களை ஜெபம் செய்ய அழைக்கிறார்?
கிளியை வைத்து சம்பாதித்தவனுக்குத்தான் தெரியும் அவனின் மூலதனம் கிளி அல்ல மக்களின் மூடத்தனமென்பது.
அது போல போதகர் சற்குணத்திற்கு நன்கு தெரியும் ஜெபம் செய்வதால் நோய் மாறாது என்றாலும் மக்களை மூடநம்பிக்கையில் இருந்து வெளிவர விடாமல் அவர்களை முட்டாளாக வைத்திருக்க உதவும் என்று.
மீண்டும் சொல்கிறோம் போதகர் சற்குணம் முட்டாள் அல்ல அயோக்கியன். அவர் மக்கள் மத்தியில் முட்டாள்தனத்தை பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.