பத்தனை சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/05/2015 (திங்கட்கிழமை)
ஹற்றன் - நுவரெலியா ஏ-7 பிரதான வீதியின் பத்தனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பாதை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, பதுளை உடரட்ட ரயில் பாதைக்கு கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாதை 30 மீற்றர் உயரமும் 20 மீற்றர் அகலமும் கொண்டது.
பழைய சுரங்கப் பாதையால் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் இந்த புதிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் பழைய சுரங்கப்பாதையில் பாதசாரிகள் மட்டும் செல்ல முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்டவாறு அரச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.