17 ஆம் திகதி திறக்கப்படவுள்ள யாழ் விமான நிலையம் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 10/10/2019 (வியாழக்கிழமை)
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய (பலாலி) அபிவிருத்தி பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
ஓடுபாதை, விமானம் தரித்து நிற்கும் பகுதி, விமானம் தரித்து நிற்குமிடத்திலிருந்து ஓடு பாதைக்கு செல்லும் பாதை (taxi way), பயணிகள் கட்டட பகுதி, சுங்கம், பிரதான கட்டுப்பாட்டறை ( ATC tower) , தீயணைப்பு பகுதி என்பன அமைகின்றன.
பயணிகளுக்கான பகுதி, சுங்கம் என்பன இரும்பில் Prefabricated building இலும் , பிரதான கட்டுப்பாட்டறை கோபுரமும் பாரிய Container box மூலம் உயர்த்தப்பட்டு தற்காலிகமாக கோபுரம் அமைக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட புனரமைப்பின்போது நிரந்த கட்டடங்கள் அமையவுள்ளன.
இதேவேளை விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான தெல்லிப்பளையில் சந்தியில் இருந்து கட்டுவன் மயிலிட்டி வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படுகிறது. இவ்வாறான நிலையில் கட்டுவன்- மயிலிட்டி வீதியில் கிராமக்கோட்டு சந்திக்கு முன் உள்ள கிழக்கு பக்க இராணுவ முட்கம்பி வேலி இராணுவத்தினரால் அகற்ற தாமதிப்பதால் முட்கம்பி வேலிக்குள் உள்ள 400 மீற்றர் வீதியை புனரமைப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை விடுவிக்க அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.