யாழ்ப்பாணத்திற்கு அவசியமான, அருமையான ஒரு முயற்சி இன்று “யாழ் முற்றம்” என்ற பெயரில் கற்பகவனம் நிறுவனத்தின் ஒரு வர்த்தக பிரிவாக செயல்வடிவம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில், யாழ் புகையிரத நிலயத்திற்கு பின்புறமாக, முன்பு ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்திருந்த கட்டடத்தில் 'யாழ் முற்றம்' அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த 'யாழ் முற்றம்' அமைந்துள்ள பழமைவாய்ந்த வீட்டை சிறப்பாக சீரமைத்து, அழகிய முறையில் உபயோகப்படுத்தப்படுகின்றது.
யாழ் முற்றத்தில் முற்று முழுதாக உள்ளூர் உற்பத்திகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அதுமட்டுள்லாமல் உணவகம் ஓன்றும் அமைக்கப்பட்டுள்ளது, ஒடியல் கூல் மற்றும் பழரசங்கள் இங்கு விற்கப்படுகிறது.
இயற்கை வழி விளைந்த காய்கறி வகைகள், வாழைப்பழம், பாக்கு மட்டையில் செய்த தட்டுக்கள், சிரட்டையில் செய்த அலாங்காரப் பொருட்கள், மண் சட்டி, பானை மற்றும் பொருட்கள், உணவுப் பொருட்கள், பால் உற்பத்தி பொருட்கள், புத்தகங்கள், வெவ்வேறு சுவையூட்டப்பட்ட தேயிலை வகைகள், அப்படம், வடகம், நல்லெண்ணெய், பனை உற்பத்திகள், கத்தி, பூட்டு மற்றும் இரும்பு உற்பத்திகள், கைவினைப்பொருட்கள் என பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்பட்டுவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.