வானுயரத்தில் வண்ணமிகு கொடி அசைந்தாட
கடலோர காற்று உந்தன் பதியின்
மேகநுகளாய் ஆனை முகத்தானின்
அருளோசை பாட
இராஜ கோபுரத்து பொம்மைகள்
வாழத்தி வாழத்தி உன் பெரு நாளை வரவேற்க
எழில் வளம் பெற்ற பதிகளுக்கெல்லாம்
பதியாக உதித்திட்ட நெடியம்பதியினிலே
சோலைகள் வாழைகள்
தித்திக்கும் கரும்புகள்
சுவைத்திடும் கனிகள்
பெரும் விருட்சங்களின் நிறம் மாறாத
இலைகிளைகள் புடை சூழ
கற்பக வாகனம் தனிலேறி-தன்
தம்பியூடன் மாயவனையூம் அருகழைத்து
குதுகளித்து கூத்தாடி ஆனந்தமாய்
ஆடியாடி வந்திடுவாய்
வல்வையில் உறைகின்ற வேழமுகத்தோனே
அருளோடு பொருள் தந்து வாழ வைப்பாய்
திருச்சிற்றம்பலத்தானே.........
கவிதை - வி.வல்வையரன் டினேஸ்கரன்