பருத்தித்துறை, காங்கேசன்துறை, குருநகர், காரைநகர் துறைமுகங்களும் அபிவிருத்திச் செய்யப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/08/2019 (வெள்ளிக்கிழமை)
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் போன்று பருத்தித்துறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகர் காரைநகர் போன்ற துறைமுகங்களையும் எமது அரசாங்கம் புனரமைத்து அபிவிருத்திச் செய்யும் என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் தற்போது கடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் நோக்குடன் துறைமுகம் மேலும் இரண்டரை மீற்றர் ஆழமாக்கப்பட்டதன் மூலம் பாரியளவிலான கப்பல்களை நங்கூரமிடுவதற்கான வசதிகளும் தற்சமயம் ஏற்பட்டிருக்கின்றன.
மயிலிட்டி துறைமுகம் 50 மீற்றர்களினால் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டி வலைப்பின்னும் தொழிற்சாலை, சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பகம் என்பனவற்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.