பொலிகை ஒற்றுமை வி.கழகத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்த விளையாட்டுப் போட்டியும் 29,30,31 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2014 (புதன்கிழமை)
பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்த விளையாட்டுப் போட்டியும் 29,30,31 ஆம் திகதிகளில் ஆலடி சந்தி அருகாமை மைதானம் பொலிகண்டியில் நடைபெறவுள்ளது.
பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழக தலைவர் திரு.க.கஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள முதல் நாள் விளையாட்டுப் போட்டியில் காலை நிகழ்வாக கடல் விளையாட்டுக்கள், மாலையில் கபடி, இல்ல விளையாட்டுக்கள், பழுத்தூக்கல், மல்யுத்தம், கம்பி இழுத்தல் போன்ற விளையாட்டுக்களும், இரண்டாம் நாள் காலை விளையாட்டுக்களான ஆண்,பெண்களுக்கான மரதன் ஓட்டம் ,சைக்கிள் ஓட்டப் போட்டிகளுடன் இல்ல விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளன.
இறுதி நாள் காலை நிகழ்வாக வினோத உடைப் போட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் ஓட்டம் என்பனவும், மாலை நிகழ்வாக புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கெள்ரவிற்பு, ஆணழகன் போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் இசை விழாவுடன் நிறைவு பெறவுள்ளது.
இவ் விளையாட்டுப் போட்டியினை கண்டு களிப்பதற்கு அனைவரையும் வருகை தருமாறு பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.