பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி வருடாந்த மகோற்சவம் 24.06.2017 வரும் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவின் முக்கிய திருவிழாவான மாம்பழத்திருவிழா 29.06.2017 வியாழக்கிழமை அன்றும் , 01.07.2017 சனிக்கிழமை அன்று பிற்பகல் 05.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 08.00 மணிக்கு பூங்காவனத்திருவிழாவும், அதனைத் தொடர்ந்து 06.07.2017 வியாழக்கிழமை அன்று மாலை 07.30 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 07.07.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 07.30 மணிக்கு தேர்த் திருவிழாவும், 08.07.2017 சனிக்கிழமை அன்று காலை 08.30 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
பொலிகண்டி அருள்மிகு கந்தவனம் சுப்பிரமணிய சுவாமி ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.