பிரபாகரன் இந்த மண்ணின் விடிவிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் - மாவை சேனாதிராஜா
பிரசுரிக்கபட்ட திகதி: 10/08/2019 (சனிக்கிழமை)
பிரபாகரன் இந்த மண்ணின் விடிவிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்.
நேற்று வல்வை ரேவடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குமார் ஆனந்தன் நீச்சல் தடாகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே திரு. மாவை சேனாதி ராஜா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வல்வெட்டித்துறை மண் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை வட்டுக் கோட்டையில் தமிழர் சுதந்திரம் பற்றிய தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், தமிழர்கள் ஒன்று பட்டு இருக்க வேண்டும் என இந்த மண்ணில் தான் தீர்மானம் எடுத்தார்கள்
இந்த வல்வெட்டிதுறைக்கு பல சாதனைகள் புகழ் பூத்த பெருமைகள் உண்டு. அதைவிட இந்த மன்னில்தான் திரு.பிரபாகரன் அவர்களும் பிறந்து வளர்ந்து இந்த மண்ணினுடைய விடிவிற்காக அர்பணித்துக் கொண்டவர், ஒரு தேசத்து மண் என்று நாங்கள் புகழாரம் சூட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம்.
அதை நாங்கள் ஒரு போதும் மறந்திருக்க முடியாது. ஏன் விடுதலை பெறும் வரைக்கும் நாங்கள் மறந்து விட முடியாது என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே கூற கடமைப் பட்டிருக்கின்றேன்.
எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உட்பட்ட பலர் கலடந்து கொண்டிருந்தனர்.
திரு மாவை சேனாதி ராஜா தெதனது உரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்தியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.