வல்வை பொது விளையாட்டரங்கு வழக்கு சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று யாழ் நகரில் இன்று இடம்பெறுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2014 (வியாழக்கிழமை)
பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கில் உள்ள வல்வெட்டித்துறை ஊரிக்காடு நெற்கொழு பகுதியில் அமைந்துள்ள வல்வை பொது விளையாட்டரங்கு சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இன்று பிற்பகல் 12.30 மணிக்கு யாழ் நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ரில்கோவில் இடம்பெறவுள்ளது.
இப் பத்திரிகையாளர் சந்திப்பினை வடமாகாண சபை உறுப்பினரும், வல்வையில் பொது விளையாட்டரங்கு ஒன்றை அமைக்க முயற்சிப்பவருமான திரு.M.K. சிவாஜிலிங்கம் மற்றும் வல்வை பிரதி நகரசபை தலைவர் திரு.சதீஸ் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இச்சந்திப்பில் மைதானம் தொடர்பான பல ஆவணங்கள் பத்திரிகையாளருக்கு காட்டி விளக்கப்படவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.