தொண்டைமானாறு கருகம்பாவெளியில் குப்பை கொட்ட எதிர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 26/09/2018 (புதன்கிழமை)
தொண்டைமானாறு கருகம்பாவெளி (கரும்பாவளி) பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு கடந்த சில நாட்களாக அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். வல்வெட்டித்துறை நகரசபை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் முழுதும் குறித்த பகுதியிலேயே கடந்த பல வருடங்களாக கொட்டப்பட்டு வருகின்றது.
கடந்த சில மதங்கள் முன்பு வரை இப்பகுதியில் குப்பை தரமேதும் பிரிக்கடாமல் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்தது. இதனால் பல பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த பகுதிகளையும் தாண்டி நீரேரி உட்பட்ட சுற்றவர உள்ள பகுதிகளில் வியாபித்து வந்தன. மேலும் அவ்வப்போது ஏற்படும் திடீர் தீ மற்றும் அதனால் உண்டாகும் புகையினால் தாம் பாதிக்கப்பட்டு வருவதாக எதிர்ப்பில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமது எதிர்ப்புக்களை சமூக வலைத் தளங்களிலும் பதிவேற்றி வருகின்றனர்.
குறித்த பகுதிகளை அண்டி சித்தர்களின் சமாதிகள் எனக் கருதப்படும் வடிவங்களும் அவர்கள் அவ்விடத்தில் வாழ்ந்ததை சாட்சி பகிரும் சில நில அமைப்புக்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கீழே தொடர்புபட்ட செய்தியில் மேற்குறிப்பிட்ட பகுதிகளின் முழுப் படத் தொகுப்பையும் காணலாம்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
kunes (srilanka)
Posted Date: September 27, 2018 at 10:20
பிரதேசச் செய்தியைப் பிரசுரித்து கவனப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. கரும்பாவளி என்றே அப்பிரதேசம் மக்களால் அழைக்கப்படுகிறது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.