மழையின் மத்தியில் தீருவிலில் மாவீரர்களுக்கு அஞ்சலி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/11/2019 (புதன்கிழமை)
மாவீரர் நாளின் வடமராட்சிப் பகுதி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் முன்னர் புலேந்திரன், குமரப்பா உட்பட்ட பன்னிருவரின் சமாதி அமையப்பெற்றிருந்த தீருுவில் பொதுப் பூங்காவில் இடம்பெற்றது.
மாவீரர் நாள் நிகழ்வுகள் மலர் மாலை அணிவித்து அகவணத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பிரதான சுடரினை மாவீரர்களாகிய கமலா, சீலன் ஆகியோரின் தந்தை திரு சுப்பிரமணியம் அவர்களால் ஏற்றப்பட்டது.
சரியாக மாலை 0605 மணிக்கு - விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரரான சங்கர் எனப்படும் சத்தியநாதன் மரணித்த - நேரத்தில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது.
, வல்வை நகர சபைத் தலைவர் கருணானந்தராசா உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தமது அஞ்சலியை மாவீரர்களுக்கு செலுத்தியிருந்தனர்.
மழையின் மத்தியில் 1000 சுடர்கள் ஏற்றபட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.