யாழ். பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதியை விரைவில் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தித்துறை – மயிலிட்டி ஊடான பொன்னாலை வீதி ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை இந்த வீதியை மக்கள் பயன்படுத்த முடியும் என அன்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த வீதியின் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதி விடுவிக்கப்படாதுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
இந்த பகுதியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கிருஷ்ணர் ஆலயமொன்றும் மக்களின் காணிகளும் விடுவிக்கப்படாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான பகுதி மற்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
எவ்வாறாயினும், காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான வீதியை விடுவிப்பதற்கான தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார். (News first)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.