நீண்ட பகல் திருவிழாவான பூங்காவனம் சிறப்பாக நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2017 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் நீண்ட பகல் திருவிழாவாகக் கருதப்படும் “பூங்காவனம்” இன்று நண்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து நண்பகல் 2 மணியளவில் அம்பாள் வீதியுலா இடம்பெற்று, அம்பாள் கோயில் வாசலில் அமைந்துள்ள பூங்காவனத்திற்கு 0300 மணியளவில் வந்திருந்தார்.
அலங்கரிக்கப்பட்டிருந்த பூங்காவனத்திற்குள் வாழ்த்துப்பா மற்றும் சிறப்பு பூசைகள் என்பன இடம்பெற்றிருந்தன.
இன்றைய பூங்காவனத் திருவிழாவையொட்டி, பொதுவாகவே பசுமை சொரியும் மரங்கள் குறைவாக அமைந்துள்ள கோயில் வெளிவளாகங்கள் இன்று மரங்களால் நிரம்பியிருந்தது கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்திருந்தது. மேலும் பூங்காவனத்தை அலங்கரிப்பதற்காக ஊட்டியிலிருந்து பூக்கள் கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருவிழா பிற்பகல் சுமார் 6 மணிவரை நீடித்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.