ஈழ்த்தின் தலை சிறந்த புராண படன விற்பன்னராக்கிய புராணப்பித்தன் கலாபூஷணம் வேலாயுதர் வினாசித்தம்பி 78 வயதில் மிருசுவில் வடக்கில் கடந்த 24 ஆம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலமாகியுள்ளார்.
சிறு பாராயம் முதலே பல்வேறு புராணங்களில் புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவர் கந்தபுராணம், ஏகாதசி புராணம், திருவாதவூரடிகள் புராணம் ஆகியவர்ரில் ஆழ்ந்தகன்ற தேர்ச்சிமிக்கவராகத் திகழ்ந்தார். ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம், செல்வச்சன்னிதி முருகன் ஆலயம் முதலான நூற்றுக்கணக்கான ஆலயங்களில் புராண படனப்பணியினை மேற்கொண்டதோடு இளைய தலைமுறையினருக்கும் ஜயந்திரிபறப் போதித்தவர்.
இவர் விருத்தி உரை எழுதிய ஏகாதசி புராணம்,கந்த புராணம் ஆகியன இன்னும் வெளிவராத நிலையில் அச்சுக் கூடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.