உலகிலேயே முதல் முறையாக 19 மணித்தியாலங்களும் 16 நிமிடங்கள் நீண்ட தூரம் எங்கும் தரித்து நிற்காது பயணித்து வெற்றிகரமாக அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது Boeing 787-9 குவாண்டாஸ் ரக விமானம்.
இந்த குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் கடந்த நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19) இரவு 49 பேருடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிமை (20) காலை காலை 7.42 உள்ளுர் நேரப்படி அவுஸ்திரேலியாவின் சிட்டி விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 19 மணித்தியாலங்களும் 16 நிமிடங்கள் விமானம் எங்கும் தரையிறக்காது தொடர்ந்து பயணித்துள்ளது.இதில் விமானப் பணிப்பெண்கள் இரு விமானிகள் பொது மக்கள் உட்பட 50 பேர் பயணித்துள்ளனர். பயணத்தூரமாக 16,200 kilometres (10,666 மைல்கள்) அமைந்துள்ளது.
இது விமானத்துறையில் புதிய வரலாற்றை படைத்துள்ளதுடன் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது
உலகிலேயே முதல் முறையாக மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள விமான சேவையின்படி பயணிகளின் அனுபவத்தை தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.