விமானம் ஒன்றில் ஜப்பானியர், அமெரிக்கர் மற்றும் இந்தியர் (இலங்கையர் என்றும் கூறலாம்) மூவர் உயிருள்ள நண்டுகள் சிலவற்றை பெட்டிகளுக்குள் வைத்துப் பயணம் செய்தனர்.
ஜப்பானியர் தனது நண்டுப் பெட்டியை, மூடி போட்டு மிகவும் இறுக்கமாக கட்டி வைத்திருந்தார்.
அமெரிக்கர் தனது நண்டுப் பெட்டியை, மூடி போட்டு வைத்திருந்தார்.
ஆனால் இந்தியரோ பெட்டிக்கு மூடி எதுவும் போடாமல் நண்டுகளை வைத்திருந்தார்.
இதைப் பார்த்து ஆச்சரியய்ப்பட்ட ஜப்பானியாரும் அமெரிக்கரும் ‘ஏன் இப்படி மூடி போடாமல் வருகின்றீர்கள், நண்டுகள் ஏறி ஓடப் போகின்றனவே’ என்று கேட்டார்கள்.
அதற்கு அதன் இந்தியர் இது ‘இந்திய நண்டுகள். ஒரு நண்டு கஷ்டப்பட்டு மேலே ஏறினால், கீழேயுள்ள நண்டுகள் மேலே ஏறும் நண்டைப் பிடித்து இழுத்து கீழே விழுத்திவிடும்’ என்றார்.
ஜப்பானியாரும் அமெரிக்கரும் வாயடைத்துப் போனார்கள்.
2)தினசரிப் பத்திரிக்கையில் தவறாது இடம்பெற்றுவரும் செய்தி ஒன்று?
வறட்சி பற்றியது (தினக்குரல் பத்திரிக்கையில்)
3)‘நான் எழுதித்தான் அப்ப ஆமி வெளியேறினார்கள்’ என்று கூறுவதைப் பற்றி?
அடடா நல்ல ஒரு விடயம், எப்படி இது சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும், அப்பொழுது தமிழ்செல்வன் அவர்களுக்கும் தெரியாமல் போனது. தெரிந்திருந்தால் நிறைய புத்தகங்கள், கடிதங்கள் எழுதி எல்லாப் பிரச்சனையையும் இலகுவாக தீர்த்திருக்கலாம்.
இதுவரை நம்பக் கடினமாக இருந்தது, காரணம் கொட்டிக் கிடக்கும் கோடீஸ்வரர்களே செய்தது இல்லை (ரஜனி காந்த்). ஆனாலும் அண்மையில்தான் இந்த முறை பணியாற்றிய கப்பலில் இருவரைப் பார்த்தேன். இருவரும் இந்தியர்கள்.
ஒருவருக்கு Transplant வெற்றி, இன்னொருவருக்கு சரிவரவில்லை. பிடரிப் பக்கம் உள்ள முடியில் தேவையானவற்றை பிடுங்கி வழுக்கையான பகுதியில் நட்டுள்ளார்கள். பிடரிப் பகுதியில் பிடுங்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்ததால், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கத்தோன்றியது.
‘என்ன செய்வது திருமணத்துக்கு பெண் பார்க்க வேண்டியுள்ளது’ என்றார்கள் இருவரும். அப்பத்தான் விளங்கியது பிரச்சனை முடியல்ல - பிள்ளைகள் தான் என்று.
நல்ல காலம் இருவருக்கும் அருகில் அமராதது, இருந்திருந்தால் இன்னும் சப்புப்பட்டிருப்பார்.
6)நீச்சல் தடாகத்துக்குரிய நிதி?
வெளிநாட்டு உதவித் திட்டங்களிலிருந்து அல்ல. நிதி அமைச்சிலிருந்து - எங்கள் வரிப்பணம் தான்.
இன்னுமொரு விடயத்தை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.
நீச்சல் தடாகத்தின் ஒரு பகுதி முன்னர் அமைக்கப்பட்ட பாதசாரிகள் நடைபாதைக்குள் சுமார் 2 அடிகள் வந்துள்ளது. குறித்த பாதசாரிகள் நடைபாதையையொட்டி கடற்கரை வீதி மற்றும் பாதசாரிகள் நடைபாதையின் அடுத்த பக்கம் என்பன அமைகின்றன. அதாவது குறித்த நிலத்தில் மட்டுமட்டாக நீச்சல் தடாகம், பாதசாரிகள் நடைபாதைகள், கடற்கரை வீதி என்பன அமைக்கப்பட்டுள்ளன.
90 ஆம் ஆண்டு மீதமிருந்த சுங்கக் கட்டிடத்தை அகற்றி, குறித்த நிலப்பரப்பை கடற்கரை நோக்கி மேலும் பல அடி தூரம் நீட்டி அமைத்தவர்கள் ரேவடிக் கழகத்தினர்.
மேலும் 2012 ஆம் ஆண்டு, ஒரு பிடி மணல் கூட தெரியாமல் இருந்த கடற்கரையை திருத்தி, விளையாட்டுப் போட்டியையும் இராணுவத்தினருக்கு மத்தியில் நாடத்தியிருந்தனர்.
பின்னர் அணைக்கட்டு கட்டி, பூங்கா அமைத்து இன்று சகலரும் கூடும் ஒரு பொது இடமாக இப்பகுதியை மாற்றி அமைத்ததும் ரேவடி கழகத்தினர் தான்.
தொடர்ந்து கடல் நீச்சல் தடாகம் அமைக்கும் பணியையும் ஆரம்பித்தனர். ‘முறைப்பாடு’ தடுத்துவிட்டது. என்றோ ஒரு நாள் கடல் நீச்சல் தடாகம் அமையும். அத்தகைய திறப்பு விழாவிலாவது ரேவடிக் கழகத்தினர் பாராட்டப்படாவிட்டாலும் குறைந்த பட்சம் குறிப்பிட்டேயாகவேண்டும் – சம்பந்தப்பட்டவர்களால்.
பழைய சரித்திரத்தை மறந்து, ஒரு நிகழ்வின் அல்லது பணியின் இறுதிக்கட்டம் மட்டும் பேசப்படுவதும் பாராட்டப்படுவதும் அருவருப்பானது.
7)நீச்சல் தடாகத் திறப்புவிழாவிற்கு பொதுசனம் அந்தளவிற்கு வரவில்லை என்று கூறப்படுவது உண்மையாய்?
உண்மை.
பார்வையாளர் அரங்கு நிரம்பியிருந்தது என்னமோ உண்மைதான். ஆனால் அவர்களில் அரச அதிகாரிகள், இதர அரச ஊழியர்கள், பாதுகாப்புப் பணி உத்தியோகத்தர்கள், விழா ஏற்பாட்டாளர்கள், நீச்சல் தடாக பணியாளர்கள், நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த நீச்சல்காரர்கள், வல்வை நகரசபை உறுப்பினர்கள், ஆனந்தன் குடும்பத்தினர் போக ஏனையவர்கள் தான் வந்திருந்த பொதுமக்கள். இவர்களிலும் விளையாட்டுக் கழகங்கள் சனசமூக நிலையங்கள் போன்று அழைப்பிதழ் பெற்றவர்கள் போக தாமாக வந்தவர்கள் மிகச் சொற்பமே. (புகைப்படங்கள் காணொளிகள் சாட்சி).
‘என்ன காரணம்’ எனச் சிலரிடம் கேட்டேன். ‘அவர்கள் இருவரும் வந்தது தான் பிரதான காரணமாக இருக்கலாம்’ என்றார்கள்.
8)வல்வையில் அடுத்து முன்னெடுக்கப் படவேண்டிய விடயம் எது?
வைத்திலிங்கப் பிள்ளை புலவரை அடையாளப்படுத்துவது தான்.
நானும் புலவரின் கொள்ளுப்பேரன் கலைநேசனும் சில வருடங்களாக புலவருக்கு சிலை வைக்க முயற்சித்து வருகின்றோம். ‘நல்ல முயற்சி’ என ஆசிரியர் சக்திவடிவேல் அவர்கள் கூறினார். ஒருவர் தானாக முன்வந்து சிறுதொகைப் பணத்தையும் தந்திருந்தார். நானும் நண்பனும் கப்பலில் பணி என்பதால் முயற்சி எதிர்பார்த்த இடத்திற்குப் பயணிக்கவில்லை.
அண்மையில் வல்வை நகரசபை இதே முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக இருப்பவர் ஆசிரியர் சக்திவடிவேல் அவர்கள் தான்.
ஆசிரியர் சக்திவடிவேல் அவர்களின் புலவர் மீதான பற்று பாராட்டப்படவேண்டிய ஒன்று..
தமிற்புலி விரைவில் சிலையடிக்கப்படவேண்டும்.
9)அடுத்த ஜனாதிபதி?
அடுத்த ஜனாதிபதியைப் பற்றி கதைக்க முன்னர் இந்த ஜனாதிபதியைப் பற்றிக் குறிப்பிடவேண்டும். தமிழர் பிரச்சனையை ஒரு பக்கம் வைத்துவிட்டு பார்த்தால் – ‘எதிர்காலத்தில் உரமூட்டப்படாத உணவு’ போன்ற சில மிகவும் அருமையான திட்டங்களைக் கொண்டுவந்திருந்தார். ஆனால் பெரிதாக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஏன் என்று புரியவில்லை.
10)தீருவிலில் தூபி?
தேவையற்ற ஒன்று. தொடர்ந்து முயற்சித்தால் மூக்குடைபடும் என்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.