வடமராட்சி உட்பட்ட யாழில் நேற்று இரவு 10 மணியிலிருந்து பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வல்வையில் சில இடங்களில் நீர் தேங்கி உள்ளத்தைக் காணக் கூடியதாகவுள்ளது.
இதேவேளை வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் (Low pressure) அந்தமான் தீவுக்கு வடக்காக நாளை 22 ஆம் திகதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து வரும் 72 மணித்தியாலங்களில் குறித்த தாழமுக்கம் புயலாக (Cyclonic storm) மாற அதிகம் வாய்ப்புள்ளது என்றும், அவ்வாறு உருவாகும் புயல் வட மேற்காக நகர்ந்து எதிர்வரும் 26 ஆம் திகதி ஓடிசா - மேற்கு வங்காள கரையைக் கடக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சர்வதேச வானிலை அவதான நிலையங்கள் சிலவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.