பெரும்பாலான இடங்களில் இரவு வேளைகளிலும் காலை நேரத்திலும் நிலவும் குளிரான காலநிலை குறையக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் மணித்தியாலத்திற்கு சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.