நாட்டில் காற்று , மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
காற்றின் வேகமானது தற்போதும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உயர்வாகக் காணப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்சூடும் என்று திணைக்களம்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும் .
வளிமண்டல திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டைச்சூழவுள்ள கடற்பரப்புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும். இந்நிலை நாளை (17) காலை 6.00 மணிவரை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.