வல்வை இந்திராணி வைத்தியசாலையின் அரிய ஒரு புகைப்படம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/10/2015 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை இந்திராணி வைத்தியசாலை திரு.இ.அப்புக்குட்டியாபிள்ளை திருமதி. சாரங்கம்மா அவர்களினால் அவர்களது மூத்த புதல்வி இந்திராணி அவர்களின் பெயரைக் கொண்டு இலங்கையின் மகாதேசாதிபதியாக இருந்த Sir Henry Monk Mason Moore என்பவரால் 1945ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் இவ் வைத்தியசாலை அப்போதைய சுகாதார அமைச்சர் கௌரவ George R.D.Silva அவர்களால் 1-02-1947ல் மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது. நிர்வாகக் கட்டிடமும் ஆண்கள் பெண்கள் விடுதிகளும் திருமதி அப்புக்குட்டியா பிள்ளையின் பெயரான சாரங்கம்மா பிரசவ விடுதியும் அமைக்கப்பட்டன.
கீழ்காணும் புகைப்படம் 1947ம் ஆண்டு திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். இப்படத்தை (விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு) www.viruba.com இணையதளம் உரிமையாளர் திரு.து.குமரேசன் அவர்கள் அனுப்பியிருந்தார். குமரேசன் அவர்கள் கிடைத்தற்கரிய நூல்களை எமக்கு அவ்வப்பொழுது அனுப்பி உதவிபுரிபவர். வல்வை மக்கள் சார்பிலும் ஆவணகாப்பகம் சார்பிலும் நன்றி. எமது தந்தையாரும் இப்படத்தில் இருப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இப்படத்தில்
1. என அடையாளமிடப்பட்டவர் அப்போதைய முதலாவது நகரசபைத் தலைவர் திரு.ஐ. திருப்பதி
2. என அடையாளமிடப்பட்டவர் இரண்டாவதாக வந்த நகரசபைத் தலைவர் எனது தந்தை ச.நடனசிகாமணி.
3. என அடையாளமிடப்பட்டவர் முன்நாள் விதானையார் வேம்படி ஒழுங்கை திரு.சேதுலிங்கம் அவர்கள்.
நடுவில் சால்வையுடன் நிற்பவர் திரு.செல்வமாணிக்கம் அவர்கள்.
மற்றவர்களின் பெயர்களை அறிய முயல்கிறோம்.
அத்துடன் வல்வெட்டித்துறை வரலாற்று ஆவணக்காப்பகத்திற்கு கிடைத்தத இந்த அரிய புகைப்படம் வெகுவிரைவில் ஆவணக்காப்பகத்தில் நிரந்தரமாக இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.