கடந்த பல ஆண்டுகளாக தமிழில் தட்டச்சு செய்யும் கலையை கற்று கணணியில் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்துடன் பலரிடமும் இதைப்பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்தேன். அலைச்சல் என்றல் சாதாரணமான
ஒரு அலைச்சல் அல்ல. நாயாய் பேயாய் அலைவது என்று சொல்வார்களே அந்த மாதிரியான ஒரு அலைச்சல்.
நான் விசாரித்து பார்த்த யாருக்கும் இந்த தமிழ் தட்டச்சு கலையை பற்றி தெரியவில்லை. நான் இப்படி அலைந்து திரிவதை கேள்வியுற்ற எனது நண்பன் ஒருவன் ஒரு இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னை தொலைபேசியில் அழைத்து இந்த தமிழ் தட்டச்சு கலையை உங்களது Valvettiturai.org என்ற இணையத்தளம் மிகவும் இலகுவாக கற்றுத்தருகிறது எனக்கூறி உங்களது இணையத்தளத்தினுள் பிரவேசித்து எப்படி கற்றுக்கொள்ளலாம் என விபரித்தான்.
உங்களது இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் காட்டிய படிமுறைகளின்படி சென்று இந்த கலையை கற்றுக்கொண்டேன். நான் ஒருக்காலும் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு இலகுவாக கற்றுக்கொள்வேன் என்று.
நான் நினைத்துக்கொண்டிருந்தேன் என் வாழ்நாளில் இந்த கலையை கற்க முடியாமல் போய்விடுமோ என்று. ஆனால் இன்று உங்கள் புண்ணியத்தால் இந்த நன்றி மடலை உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன்.
சிவபுராணத்திலே மாணிக்கவாசக சுவாமிகள் பாடுவார்கள் அவன் அருளாள் அவன் தாள் வணங்கி என்று அதே போன்று நானும் இன்று உங்கள் அருளால் உங்கள் தாள்களை நன்றியுடன் வணங்துகிறேன். Valvettiturai.org இணையத்தளமே எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து கோடான கோடி நன்றிகள் உனக்கு.
நாம் இதை செய்தியில் பிரசுரித்ததற்கான காரணம், இவரைப் போல் இன்னும் பலர், தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அறியாமல், தமிழை ஆங்கிலத்திலேயே தட்டச்சு செய்து கொண்டிருக்கின்றார்கள். அல்லது தமிழில் தட்டச்சு செய்வதை
கடினமான ஒன்றாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
தெரியாதவர்களுக்கு இதை பரிமாறுங்கள், எல்லோரும் எழுத்தாளர் ஆவோம்.......
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மனோகரன் (United Kingdom)
Posted Date: March 30, 2015 at 04:31
வணக்கம் ஐயா,
எனது கடிதத்தை பிரசுரித்தமைக்கு நன்றி.
நான் பயன் பெற்ற தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்ற விளக்கங்களையும் படிமுறைகளையும் கொன்ட விபரனக்கொத்து தற்போது உங்களது இணையத்தள இதழின் 23ஆம் பக்கத்துக்கு சென்று விட்டது.
இந்த விபரனக்கொத்தை மீண்டும் ஒரு முறை முதல் பக்கத்தில் பிரசுரித்தால் புதிதாக இணைந்து கொண்டுள்ள இணையத்தள வாசகர்களுக்கும் அதனை வாசிக்க தவறிய பழைய வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
நான் ஏதாவது பிழையாக எழுதி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
வணக்கம்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.